விநியோகிப்பதற்கு தேவையான எந்தவித சமையல் எரிவாயுக்களும் கையிருப்பில் இல்லாமையினால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் விடுமுறை தினமாக இருந்தபோதிலும் போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு நிலையத்திலிருந்து அதிகளவான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலைமையில், விநியோகத்திற்குத் தேவையான எரிவாயுவானது கையிருப்பில் இல்லை என்றும், இனி அத்தியாவசிய சேவைக்காக மாத்திரமே எரிவாயுவினை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு கோரி நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடையமாகும்.