இந்த ஆண்டுக்கான எல்பிஎல் கிரிக்கெட் போட்டியை ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த முறை சம்பியனான யாழ் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தை பெற்ற கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என அறியமுடிகின்றது.
போட்டியில் சேர்க்கப்பட்ட மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 24 ஆகும், இதில் 20 போட்டிகள் முதல் சுற்றுக்கு சொந்தமானது. இறுதிச் சுற்றில் 04 போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான எல்பிஎல் போட்டியின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 21ஆம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.