ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் அவர்களது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியேறியுள்ளனர்.
அவை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Antonov-32 (AN-32) ரக விமானமாகும்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து இன்று அதிகாலை 01.45 மணியளவில் ஜனாதிபதி மற்றும் குழுவினர் மாலைதீவு நோக்கி புறப்பட்டுள்ளனர்.