காலி முகத்திடல் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் 15, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடலில் போராட்டக் களத்தில் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட மோதல்களினால் காயமடைந்த சுமார் 100 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.