ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14 ஆம் திகதி முதல் தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை பிரதமர் பதவியில் இருப்பார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும், புதிய ஜனாதிபதியை நியமிக்கும் பணிகள் 07 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.