நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை செவ்வாய்க்கிழமை (19) விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே நீதியமைச்சினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.
எவ்வாறாயினும், தெத்த கல்கிரியை சேர்ந்த ரஞ்சன் ராமநாயக்கவின் தண்டனை காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையும் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.