தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தின் 05 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பல படிகளின் கீழ் நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தென் மாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் நாளை (25) முதல் வாரத்தில் 05 நாட்கள் நடத்துவதற்கு தென் மாகாண கல்விச் செயலாளர் தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும் போக்குவரத்துச் சிரமங்களினால் பாடசாலைகளுக்கு வருவதற்கு சிரமப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பில் அதிபருக்கு அறிவிக்குமாறும் தென்மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.