தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை (01) முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்தில் கம்பஹா, ஹொரணை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக சுமார் 40 கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டாக்டர் நிலான் மிரெண்டா குறிப்பிட்டார்.