நாட்டின் தற்போதைய நிலைமையில் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுடைய தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்குரிய புதிய திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ் விடயத்தினை குறிப்பிட்டார்.
சென்ற மாதம் 106 வகையான மருந்துகள் மற்றும் 38 வகையான மருத்துவ உபகரணங்களினையும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் எதிர்வருகின்ற 2 வாரங்கலிற்குள் 17 வகையான மருந்து வகைகல்;களினையும், 81 வகையான மருத்துவ உபகரணங்களினையும் இறக்குமதி செய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.