எரிபொருள் பிரச்சினை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் அங்கொட, அம்பாறை உள்ளிட்ட பல டிப்போக்களின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைக்குச் செல்வதற்கு எரிபொருள் வழங்காத காரணத்தினால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்த போதிலும், எரிபொருள் வழங்குவதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நேற்று (09) காலை அது முடிவுக்கு வந்ததாக அங்கொட மற்றும் அம்பாறை டிப்போ ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில்,நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவை இன்னும் குறைந்த மட்டத்தில் உஇயங்குகின்றமையும் குறிப்பிட வேண்டிய விடையமாகும்.