ஈஸ்டர் ஞாயிறு அன்று குண்டுவெடிப்பு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தமது நம்பிக்கை எனவும், அதற்கு அனைவரும் சம்மதித்தால், பிரித்தானிய பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் ஏனைய அறிக்கைகளை மீளாய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பதில் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை விசாரணை செய்த வெளிநாட்டு புலனாய்வாளர்கள் மற்றும் உள்நாட்டு புலனாய்வாளர்களின் உதவியை பெற்று இந்த பிரச்சினையை தாமதிக்காமல் தீர்க்க வேண்டும் என பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் சட்டத்தை மீறும் இயக்கம் ஒன்று இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாசிச முறைகளால் ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அமைதியான போராட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்வேன் என்றும் பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு அரசியல் பிரச்சினை எனவும், 19வது அரசியலமைப்பு திருத்தம் மீள அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மீண்டும் கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 13ஆம் திகதி தாம் பிரதமராக பதவியேற்ற போது நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை குறைக்க முடிந்ததாக பதில் ஜனாதிபதி விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ் பருவ பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு வழங்க முடிந்துள்ளதாகவும், பிரதான பருவ பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தற்போது செய்து வருவதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் பதில் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என இறுதி நிமிடத்தில் விளக்கமளித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், டீசல் கையிருப்பு பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும், ஜூலை 21 முதல் பெற்றோலும் விநியோகிக்கப்படும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பயனை இலங்கை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.