கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டதாக கொழும்பு வெல்லத்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் பலம் வாய்ந்த அரசியல் கட்சி ஒன்றின் தொழிற்சங்க தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.