நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டா கோ கம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக அவர் கூறினார்.
தற்போது கோத்தா கோ கமவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான் அவர்களுடன் பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு தயாராக உள்ளதாகவும், மேலும் போராட்டத் தங்களின் மீது இனி ஒடுக்குமுறையானா எந்தவொரு முயற்சிகளும் இடம்பெறாது எனவும் பிரதமர் உறுதியளிதிருக்கின்றார்.