அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையை பின்பற்றாதவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏற்கனவே வரிசையில் காத்திருக்கும் மக்களும் புதிய முறையில் பதிவு செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும், அவர்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.