தாக்குதல் மூலம் மக்கள் போராட்டங்களை நிறுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில், காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு போராட்டத்தை நசுக்க முயற்சிக்கின்றார் என டில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பு இன்னும் நடைபெற்று வருகிறது.