வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன யுவ பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.